Tuesday, December 23, 2014

சென்னை புத்தகக் கண்காட்சி 2015


சென்னை மவுன்ட் ரோட்டிலுள்ள நந்தனம் YMCA மைதானத்தில் எதிர்வரும் ஜனவரி 09 ஆம் தேதி முதல் ஜனவரி 25 ஆம் தேதி வரை “சென்னை புத்தகக் கண்காட்சி 2015” ஏற்பாடாகியிருக்கிறது. புத்தகக் கண்காட்சியை ஒட்டி இந்த முறையும் காலச்சுவடு பதிப்பகம் பல்வேறு தன்மையிலான புதிய புத்தகங்களைக் கொண்டு வருகிறது. அதில் சில முழுத்தொகுப்புகளும் அடக்கம். வாசகர்களின் நலன் கருதித் தேர்ந்தெடுத்த சில தொகுப்புப் புத்தகங்களை முன் வெளியீட்டுத் திட்டத்தில் கொடுக்க இருக்கிறோம். உங்களுக்கு சலுகை விலையில் இப்புத்தகங்கள் வேண்டுமெனில் முன்பதிவு (Pre Order) செய்து ஜனவரி மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். கீழ்காணும் நான்கு புத்தகங்களையும் முன்வெளியீட்டுத் திட்டத்தில் வாங்கக் கடைசி நாள்: ஜனவரி 5, 2015 

காலச்சுவடு முன் வெளியீட்டுத் திட்டம் – 2015

1. சாமிநாதம் – உ. வே. சா முன்னுரைகள்
ரூபாய்: 1000, முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூபாய்: 650

2. பாரதி பாடல்கள் – பழ. அதியமான்
ரூபாய்: 750, முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூபாய்: 490

3. தி. ஜானகிராமன் சிறுகதைகள் – சுகுமாரன்
ரூபாய்: 975, முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூபாய்: 590

4. தமிழக ஓவியங்கள் – ஒரு வரலாறு
ரூபாய்: 475, முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூபாய்: 290

இவைகள் தவிர “கிளாசிக் நாவல்கள், கிளாசிக் சிறுகதைகள், கிளாசிக் கட்டுரைகள், தன் வரலாறுகள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள்” என ஏறக்குறைய 60 புத்தகங்களைச் சென்னை புத்தகக் கண்காட்சியின் காலச்சுவடு அரங்கில் வாங்கக் கிடைக்கும். அவற்றில் சில உங்களுடைய கவனத்திற்கு:

கட்டுரைகள்:

1. பச்சைத் தமிழ்த் தேசியம் – சுப. உதயகுமாரன் (Rs. 125)
2. தலித் பொதுவுரிமைப் போராட்டம் – கோ. ரகுபதி (Rs. 160)
3. கனம் கோர்ட்டாரே! – நீதிநாயகம் கே. சந்துரு (225)
4. எம். எஸ். எஸ். பாண்டியன் கட்டுரைகள் (Rs. 75)
5. ஆளுமைகள் தருணங்கள் – ரவி சுப்பிரமணியன் (Rs. 100)
6. மனநோய்களும் மனக்கோளாறுகளும் – Dr எம். எஸ். தம்பிராஜா (Rs. 290)
7. கதைப்பாடலில் கட்டபொம்மன் (145)
8. தமிழகத்தில் ஈழ அகதிகள் – தொ. பத்தினாதன் (80)
9. காலந்தோறும் பெண்கள் – ராஜம் கிருஷ்ணன் (150)
10. திராவிட மானுடவியல் – பக்தவச்சல பாரதி (240)
11. தமிழ்க் கிறித்தவம் – ஆ. சிவசுப்ரமணியன் (135)

மொழிபெயர்ப்புகள்:

1. கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும் – மகாசுவேதா தேவி
2. நான் மலாலா – தமிழில்: பத்மஜா நாராயணன்
3. ஊரும் சேரியும் – சித்தலிங்கையா
4. மனவளமான சமுதாயம் – எரிக் ஃபிராம்
5. ஆட்கொல்லிச் சிறுகதை – ஜிம் கார்பெட்
6. நான் மலாலா – மலாலா யூசுஃப்ஸை

கவிதைகள்:

1. பிரமிள் கிளாசிக் கவிதைகள்
2. ஞானக்கூத்தன் கவிதைகள் (Rs. 160)
3. ஊர்வசி கவிதைகள் (Rs. 60)

புனைவுகள்:

1. அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு – அம்பை (Rs. 100)
2. சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்
3. ஆலவாயன் – பெருமாள்முருகன் (Rs. 175)
4. அர்த்தநாரி – பெருமாள்முருகன் (Rs. 175)
5. இரண்டு விரல் தட்டச்சு – அசோகமித்திரன்
6. யுத்தங்களுக்கிடையில்... – அசோகமித்திரன் (Rs. 100)
7. பயணம் – அரவிந்தன் (Rs. 350)
8. கனவுச்சிறை – தேவகாந்தன்
9. 1958 – அ. ரவி (Rs. 200)
10. கங்கணம் – பெருமாள் முருகன் (Rs. 300)

மேலும், “ஜி. நாகராஜன், மௌனி, சுந்தர ராமசாமி, கு. ப. ரா, கு. அழகிரிசாமி கிருஷ்ணன் நம்பி, அம்பை” போன்ற கிளாசிக் எழுத்தாளர்களின் முழுத் தொகுப்புகளையும் மறுவெளியீடாகக் கொண்டு வந்திருக்கிறோம். அவையாவும் கூட காலச்சுவடு பதிப்பகத்தில் தற்போது வாங்கக் கிடைகிறது. நன்றி... 

தொடர்புக்கு:

காலச்சுவடு பதிப்பகம்,
பழைய எண்: 130, புதிய எண்: 257,
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை ,
சென்னை - 600 005
91-44-2844 1672

Web: www.kalachuvadu.com
FB: www.facebook.com/Kalachuvadu Magazine

Chennai Book Fair 2015 | YMCA College - Nandanam, MountRoad, Chennai

No comments:

Post a Comment